< Back
மாநில செய்திகள்
திருமணம் ஆகாததால்    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

திருமணம் ஆகாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Nov 2022 6:45 PM GMT

திருமணம் ஆகாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


திண்டிவனம்,

திண்டிவனம் அருகே செம்பாக்கம் அடுத்த மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கைமலை மகன் சிவசக்தி (வயது 24). இவர் சென்னையில் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தனது வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டிக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வெள்ளிமேடு பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்க அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சிவசக்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்