< Back
மாநில செய்திகள்
கம்பத்தில்கார் மோதி தொழிலாளி பலி
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தில்கார் மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
28 Dec 2022 6:45 PM GMT

கம்பத்தில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

கம்பத்தில், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கம்பம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர், கேரள மாநிலம் செங்கரையை சேர்ந்த தொழிலாளியான கணேசன் (வயது 50) என்பதும், அந்த வழியாக வந்த கார் மோதி பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்