< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: மின்விளக்குகளில் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்

தினத்தந்தி
|
17 July 2022 3:19 PM GMT

தமிழ்நாடு நாள் நாளை கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1-ந்தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் பல்வேறு தரப்பினர் நவம்பர் 1-ந்தேதி எல்லை போராட்டத்தினை நினைவு கூரும் நாளாகத்தான் அமையும். அதை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டார். அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய தினமே, 'தமிழ்நாடு நாள்' என கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, நாளை 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளத்து.

மேலும் செய்திகள்