< Back
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
25 Aug 2024 10:21 AM GMT

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாளை, சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேர இடைவெளிகளில் இயங்கும்: அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்