< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
13 Sep 2022 12:35 PM GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டியை அமைச்சர் காந்தி கொடியளசைத்து தொடங்கி வைத்தார்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டியை அமைச்சர் காந்தி கொடியளசைத்து தொடங்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து, போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்களது சொந்த சைக்கிளுடன் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்டவர்கள் புதிய கலெக்டர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு ஆன்சிலரி பெல் ரூட், அக்ராவரம் வழியாக மீண்டும் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், நகர மன்ற உறுப்பினர் வினோத், உடற்கல்வி ஆய்வாளர்கள், தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

13 வயது வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கான போட்டியும், 15 வயது வரை உள்ள மாணவ -மாணவிகளுக்கான போட்டியும், 17 வயது வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கான போட்டியும் நடத்தப்பட்டது. 3 பிரிவுகளிலும் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. 4 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவை வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று வழங்கப்படும்.

மேலும் செய்திகள்