< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
லாரி மோதி மூதாட்டி பலி
|18 April 2023 6:45 PM GMT
கந்தம்பாளையத்தில் லாரி மோதி மூதாட்டி இறந்தார்.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரில் விவசாயக்காட்டில் கரூர் பாக நத்தம் செல்வ நகரை சேர்ந்த ராசு என்பவரின் மனைவி சுசீலா (வயது 63). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உலகபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் பிடித்து எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை மீட்டு அந்த வழியாக சென்றவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுசீலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொத்தனர். இதன்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.