< Back
மாநில செய்திகள்
மூதாட்டி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மூதாட்டி பலி

தினத்தந்தி
|
6 Oct 2022 7:45 PM GMT

வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி ஒருவர் பலியானார்.

வடமதுரை அருகே உள்ள மோர்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 46). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுடன் முத்துலட்சுமியின் தாய் மாரியம்மாள் (60) வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியம்மாள், தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவர், ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாரியம்மாளின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்