< Back
மாநில செய்திகள்
கார் மோதி மூதாட்டி பலி
அரியலூர்
மாநில செய்திகள்

கார் மோதி மூதாட்டி பலி

தினத்தந்தி
|
7 Nov 2022 6:45 PM GMT

கார் மோதி மூதாட்டி பலியானார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கார் மூதாட்டி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருச்சி தில்லைநகரை சேர்ந்த பழனிவேல் மகன் விமல்(வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்