< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
16 Aug 2023 5:29 PM GMT

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள்(வயது 73). இவர் நேற்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வி.களத்தூரை சேர்ந்த சமீர்அகமது(35) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பச்சையம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்