< Back
மாநில செய்திகள்
தண்ணீர் என நினைத்து மண்எண்ணெய்யை குடித்த பெண் சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தண்ணீர் என நினைத்து மண்எண்ணெய்யை குடித்த பெண் சாவு

தினத்தந்தி
|
1 July 2023 9:26 PM GMT

ஒரத்தநாடு அருகே தண்ணீர் என நினைத்து மண்எண்ணெய்யை குடித்த பெண் உயிரிழந்தார்.

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே தண்ணீர் என நினைத்து மண்எண்ணெய்யை குடித்த பெண் உயிரிழந்தார்.

மண்எண்ணெய்யை குடித்தார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவருடைய மனைவி பரிசுத்தம் (வயது62). சம்பவத்தன்று இவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து குடித்து விட்டார்.

பரிதாப சாவு

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பரிசுத்தத்தை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரிசுத்தம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்