< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை - மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை - மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில்

தினத்தந்தி
|
15 March 2023 9:04 AM GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனையும் அவரது மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு கோகுலாபுரம் அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 62). இவரது மனைவி சந்திரா (39). செங்கல்பட்டை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கடந்த 2019-ம் ஆண்டு மனோகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கு அவரது மனைவி சந்திராவும் உடந்தையாக இருந்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்கள் மீது செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதுபோல குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சந்திராவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.

மேலும் செய்திகள்