< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
|11 Aug 2023 7:30 PM GMT
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கீழமாத்தூர் சீதாராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 70). கூலி தொழிலாளியான இவர் கடந்த 8-ந் தேதி மாலை ஆடுகளுக்காக காட்டில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி வேப்பந்தழையை உடைத்தார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அங்கு வந்தவர்கள், உடனடியாக ராஜேந்திரனை மீட்டு அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.