< Back
மாநில செய்திகள்
விபத்தில் முதியவர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்தில் முதியவர் சாவு

தினத்தந்தி
|
26 Aug 2023 7:01 PM GMT

விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

சிவகாசி,

சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் காளையப்பன் (வயது 57). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். மீனம்பட்டி அருகே வரும் போது முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால் எதிர்பாராதநிலையில் காளையப்பன் ஓட்டி வந்த வாகனம், சரக்கு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்த போது காளையப்பன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காளையப்பன் மகன் மணிகண்டன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சாத்தூர் முத்தையால் மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை விபத்தில் இறந்த காளையப்பன் மகன் மணிகண்டன் சிவகாசி மாநகர தி.மு.க. தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளராக உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்