< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் சாவு

தினத்தந்தி
|
5 Sep 2023 9:06 PM GMT

மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார்.

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா எம். இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரும் இவருடைய சித்தப்பா போஸ் (வயது 75) என்பவரும் மோட்டார் சைக்கிளில் காரியாபட்டிக்கு வந்தனர். பாண்டியன் நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது முன்னாள் சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீெரன பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த போஸ் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி போஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்