< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்த முதியவர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்த முதியவர் சாவு

தினத்தந்தி
|
31 Aug 2023 6:29 PM GMT

விஷம் குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர் அருகே உள்ள அப்பிபாளையம் ராசாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியசாமிக்கு இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்து வந்த பெரியசாமி மனமுடைந்து, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்