< Back
மாநில செய்திகள்
கார் மோதி முதியவர் சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கார் மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
9 Aug 2023 7:24 PM GMT

கார் மோதி முதியவர் சாவு

ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் மேலத்தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது60). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சை -மன்னார்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே வந்த ஒரு கார் சாமிக்கண்ணு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாமிக்கண்ணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்