< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
முதியவர் திடீர் சாவு
|20 Sep 2023 7:29 PM GMT
மந்தாரக்குப்பத்தில் முதியவர் திடீரென இறந்தார்.
நெய்வேலி,
வடலூரை சேர்ந்தவர் முருகன் (வயது 62). இவர் என்.எல்.சி.யில் ஓய்வுபெற்ற தொழிலாளி. இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் காலை வடலூரில் இருந்து தனியார் பஸ்சில் மந்தாரக்குப்பம் சென்றார். பின்னர், கங்கைகொண்டான் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் நின்று கொண்டிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.