< Back
மாநில செய்திகள்
முதியவர் திடீர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

முதியவர் திடீர் சாவு

தினத்தந்தி
|
19 Aug 2023 6:41 PM GMT

முதியவர் திடீரென இறந்தார்.

குளித்தலை எலிமெண்டரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பழனிக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பழனியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்