< Back
மாநில செய்திகள்
முதியவர் திடீர் சாவு
அரியலூர்
மாநில செய்திகள்

முதியவர் திடீர் சாவு

தினத்தந்தி
|
4 Aug 2023 7:30 PM GMT

முதியவர் திடீரென உயிரிழந்தார்.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் வால் பட்டறை எதிரே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரமாக படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அப்பகுதி மக்கள் தண்ணீர், உணவு உள்ளிட்டவை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) ஆனந்த், தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த முதியவரின் உடலை போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்