< Back
மாநில செய்திகள்
கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
தர்மபுரி
மாநில செய்திகள்

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

தினத்தந்தி
|
26 Oct 2023 7:00 PM GMT

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போத்தா என்கிற ராஜா (வயது 63). இவருக்கு அனிதா (21) என்ற மகளும், அஜித் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் உறவினரின் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சம்பவத்தன்று கடத்தூருக்கு போத்தா, அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போத்தா, உறவினர் நாகமணி மோட்டார் சைக்கிள் பின்புறம் அமர்ந்து வந்தனர். அஜித் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

அப்போது இருமத்தூர் அருகே உள்ள கொன்றம்பட்டி காளியம்மன் கோவில் மேடு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் பின்புறம் உள்ள டயர் பஞ்சரானது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து போத்தா பலத்த காயமடைந்தார். அஜித், நாகமணி காயங்கள் இன்றி தப்பினர். போத்தாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்க பரிசோதித்த டாக்டர்கள் போத்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அனிதா கம்பைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்