< Back
மாநில செய்திகள்
மொபட் திருடிய முதியவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மொபட் திருடிய முதியவர் கைது

தினத்தந்தி
|
9 Aug 2023 11:01 PM GMT

பாளையங்கோட்டையில் மொபட் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் தனது மொபட்டை தியாகராஜநகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கொடிக்குளத்தை சேர்ந்த அப்துல்காதர் (62) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்