< Back
மாநில செய்திகள்
மூதாட்டி திடீர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மூதாட்டி திடீர் சாவு

தினத்தந்தி
|
27 July 2023 7:02 PM GMT

மூதாட்டி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

சங்கராபுரம,

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கண்ணம்மாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்