< Back
மாநில செய்திகள்
கந்தம்பாளையம் அருகேமாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து செவிலியர் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

கந்தம்பாளையம் அருகேமாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து செவிலியர் பலி

தினத்தந்தி
|
5 Oct 2023 7:00 PM GMT

கந்தம்பாளையம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து செவிலியர் பலியானார்.

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து செவிலியர் பலியானார்.

செவிலியர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரீத்தி (வயது 27). இவர் பி.எஸ்சி. முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர செவிலியராக பணியாற்றி வந்தார்.

இதற்காக அவர் சுகாதார நிலையம் அருகே உள்ள வீட்டில் மாடி அறையை வாடகைக்கு எடுத்து தனியாாக தங்கியிருந்தார். சமீபகாலமாக பிரீத்தி ரத்தஅழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.

விசாரணை

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டு அவர் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் விடுமுறை முடிந்து நல்லூருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக மாடிபடிக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது மயக்கம் ஏற்பட்டதால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே பிரீத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற நல்லூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். செவிலியர் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்