< Back
மாநில செய்திகள்
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தினத்தந்தி
|
27 April 2023 6:34 PM GMT

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. பயிற்சியை தோகைமலை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலட்சுமி, மாகாளி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கொரோனா ெதாற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை எப்படி சாி ெசய்ய வேண்டும், 8 வயது உடைய அனைத்து குழந்தைகளையும் வருகின்ற 2025-ம் ஆண்டிற்குள் அடிப்படை மொழித்திறன்களை எப்படி ெபற ைவக்கலாம், 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு கற்றுக் ெகாடுக்க ேவண்டும் என பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில், தொடக்கநிலை ஆசிரியர்கள் மற்றும் பலா் கலந்து ெகாண்டனா்.

மேலும் செய்திகள்