< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளி கார் மோதி சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளி கார் மோதி சாவு

தினத்தந்தி
|
14 Jun 2022 7:37 AM GMT

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அஸ்சாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 22). இவர் சென்னையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக அப்துல்காதர் நேரில் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு புதுவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அப்துல் காதர் கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்