< Back
மாநில செய்திகள்
குடும்பத்தகராறில் புதுப்பெண் தற்கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குடும்பத்தகராறில் புதுப்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
18 Oct 2023 9:30 PM GMT

நத்தம் அருகே குடும்பத்தகராறில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் சிங்கராஜ் (வயது 45). அவருடைய மகள் பொதியழகி (வயது 19). இவருக்கும், மதுரை மாவட்டம் மேலுார் அருகே அலங்கம்பட்டியை சேர்ந்த சூடாமணி (23) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு, காசம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பொதியழகி வந்து விட்டார். இந்தநிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில், தோட்டத்து வீட்டில் கயிற்றால் பொதியழகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பொதியழகியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பொதியழகிக்கு திருமணமாகி, 8 மாதங்களே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்