< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
நீலகிரி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி

தினத்தந்தி
|
12 Aug 2023 8:00 PM GMT

காய போட்டிருந்த துணிகளை எடுத்த போது மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியானார்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் பிரபு (வயது 24). இவருக்கும், மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று அர்ஜூன் பிரபு தனது வீட்டின் முன்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து உள்ளார். அப்போது அந்த கம்பி மீது மின் ஒயர் பட்டது. இதை தெரியாமல் கம்பியை பிடித்த போது, அர்ஜூன் பிரபுவை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனேவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மகாலட்சுமி கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்