< Back
மாநில செய்திகள்
புதிய மின்மாற்றி ெதாடக்க விழா
விருதுநகர்
மாநில செய்திகள்

புதிய மின்மாற்றி ெதாடக்க விழா

தினத்தந்தி
|
19 May 2023 6:54 PM GMT

புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து மீனம்பட்டி, பாறைப்பட்டி, நாரணாபுரம், சுந்தர்ராஜபுரம், ராமசாமிபுரம், அனுப்பன்குளம், பேராபட்டி, ராமலிங்காபுரம், கோணம்பட்டி, மேலக்கோணம்பட்டி, சின்னகாமன்பட்டி, மயிலாடுதுறை, அண்டியாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிது. இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகமானதால் மின்வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அனுப்பன்குளம் துணை மின்நிலையத்துக்கு கூடுதலாக 10 எம்.வி.ஏ. மின்மாற்றியை அரசு வழங்கியது. இதன் தொடக்க விழா நேற்று சென்னையில் நடை பெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதனை காணொளி காட்சி மூலம் அனுப்பன் குளம் துணை மின் நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், பஞ்சாயத்து தலைவர் கவிதாபாண்டியராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தனலட்சுமி கண்ணன், அன்பரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மின்வாரிய அதிகாரி பாவநாசம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்