< Back
மாநில செய்திகள்
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; 3 இயக்குநர்களுக்கு நிபந்தனை ஜாமீன் - மதுரை கோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; 3 இயக்குநர்களுக்கு நிபந்தனை ஜாமீன் - மதுரை கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
30 Aug 2023 7:17 PM GMT

கைது செய்யப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தி கூறியுள்ளனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி, பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தலா ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.



மேலும் செய்திகள்