< Back
மாநில செய்திகள்
வருசநாடு அருகேடிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
தேனி
மாநில செய்திகள்

வருசநாடு அருகேடிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

தினத்தந்தி
|
17 Sep 2023 6:45 PM GMT

வருசநாடு அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியாகினார்.

வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35). பொக்லைன் எந்திர டிரைவர். இவர், அதே கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக நேற்று முன்தினம் முனியாண்டி, டிராக்டரில் வேலை ஆட்களை அழைத்து கொண்டு கட்டுமான பொருட்களை ஏற்றுவதற்காக கடமலைக்குண்டுவிற்கு சென்றார். டிராக்டரை முனியாண்டி ஓட்டினார். பின்னர் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் கீழபூசணூத்து கிராமத்திற்கு டிராக்டரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தில் உள்ள வரப்பில் ஏற முயன்றபோது திடீரென டிராக்டர் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்