< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீர் சாவு

தினத்தந்தி
|
20 Jun 2023 6:45 PM GMT

தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீரென இறந்து போனார்.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் டேவிட்செல்வின் (வயது 36). இவர் கனநீர் ஆலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோயால் அவதிப்பட்டு வந்தாராம். நேற்று முன்தினம் திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்