< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
15 Jun 2023 6:45 PM GMT

திருச்செந்தூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்து போனார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே காயாமொழி வடக்கு குமாரசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலையில் காயாமொழி குமாரசாமிபுரத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் ஏறி புளியம்பழம் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி புளியமரத்திலிருந்து அவர் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு ஆட்டோ மூலம் திருச்செந்தூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்