< Back
மாநில செய்திகள்
தேனி அருகே  தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
8 Oct 2022 4:32 PM GMT

தேனி அருகே தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பழனிசெட்டிபட்டி தென்றல் நகரை சேர்ந்த முத்துக்குமார் உள்பட 4 பேர், அவர்களை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சந்திரகலா பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்