< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகேவிவசாயி வீட்டில் செல்போன்கள் திருட்டு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் அருகேவிவசாயி வீட்டில் செல்போன்கள் திருட்டு

தினத்தந்தி
|
10 April 2023 6:45 PM GMT

பெரியகுளம் அருகே விவசாயி வீட்டில் செல்போன்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே உள்ள ஏ. மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40). விவசாயி. கடந்த 7-ந் தேதி இரவு இவர், வீட்டில் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 செல்போனையும் காணவில்லை. இதுகுறித்து அவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினா். விசாரணையில் சின்னசாமி தூங்கி கொண்டிருந்தபோது நைசாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்