< Back
மாநில செய்திகள்
நம்பியூர் அருகேபச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு
மாநில செய்திகள்

நம்பியூர் அருகேபச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

தினத்தந்தி
|
5 Jan 2023 10:18 PM GMT

நம்பியூர் அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.

நம்பியூர்

நம்பியூர் கோசனம் அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பகலில் பச்சை பழத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அக்னி அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்