< Back
மாநில செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே  மகாமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே மகாமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
7 Sep 2022 2:52 PM GMT

மூங்கில்துறைப்பட்டு அருகே மகாமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆனைமடுவில் பிரசித்தி பெற்ற மகா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விசேஷ சாந்தி, விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மகாமுத்து மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி சக்தி விநாயகர், மகா முத்து மாரியம்மன், பாலமுருகன் ஆகிய கோவில் கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆனைமடுவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்