< Back
மாநில செய்திகள்
மயிலாடும்பாறை அருகேஅரசு பஸ் சேவை நிறுத்தம் மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி
மாநில செய்திகள்

மயிலாடும்பாறை அருகேஅரசு பஸ் சேவை நிறுத்தம் மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
30 April 2023 6:45 PM GMT

மயிலாடும்பாறை அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மயிலாடும்பாறையில் இருந்து முன்பு மூலக்கடை, முத்தாலம்பாறை வழியாக தாழையூத்து கிராமம் வரை கடந்த ஆண்டு புதிதாக அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் தாழையூத்து மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வந்த நிலை மாறி பஸ்சில் இலவசமாக பயணம் செய்து வந்தனர். இந்த டவுன் பஸ் நாள் ஒன்றுக்கு 2 முறை தாழையூத்து கிராமத்திற்கு வந்து சென்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தாழையூத்து கிராமத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்பாறை வரை மட்டுமே அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தாழையூத்து மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பஸ்சிற்காக 1 கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முத்தாலம்பாறை வரை இயக்கப்பட்டு வரும் அரசு டவுன் பஸ்சை தாழையூத்து வரை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்