< Back
மாநில செய்திகள்
தேவதானப்பட்டி அருகேகிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி:நீச்சல் தெரியாததால் பரிதாபம்
தேனி
மாநில செய்திகள்

தேவதானப்பட்டி அருகேகிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி:நீச்சல் தெரியாததால் பரிதாபம்

தினத்தந்தி
|
7 May 2023 6:45 PM GMT

தேவதானப்பட்டி அருகே நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

பெரம்பலூரை சேர்ந்த சந்திரசேகர் மகன் அருணா பல்தேவ் (வயது 19). இவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அவர், மாணவர்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் குளிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர், சக மாணவர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். அனைவரும் கிணற்றில் இறங்கி ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர்.

அருணா பல்தேவ் மட்டும் கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் தத்தளித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கிணற்றில் மூழ்கினார்.

கிணற்றில் மூழ்கி பலி

இதையடுத்து கிணற்றில் இருந்து மேலே வந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் குதித்து அருணா பல்தேவ் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பறற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீச்சல் தெரியாததால் அருணா பல்தேவ் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்