< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகேவாகனம் மோதி பெண் சாவு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகேவாகனம் மோதி பெண் சாவு

தினத்தந்தி
|
7 May 2023 6:45 PM GMT

ஆண்டிப்பட்டி அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாரதா (வயது 59). நேற்று முன்தினம் இ்ரவு சாரதா, தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சக்கம்பட்டி பகுதியில் தேனி-மதுரை சாலையை இருவரும் ஒருவர் பின் ஒருவராக கடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த வாகனம் சாரதா மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பால் ஏற்றி வந்த வாகன டிரைவரான முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்