< Back
மாநில செய்திகள்
விபத்தில் படுகாயமடைந்த நாதஸ்வர கலைஞர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்த நாதஸ்வர கலைஞர் சாவு

தினத்தந்தி
|
7 July 2023 6:22 PM GMT

விபத்தில் படுகாயமடைந்த நாதஸ்வர கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

குளித்தலை அருகே உள்ள ரெத்தினத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவரது மனைவி சுதா. இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று காங்கேயத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் குறப்பாளையம் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கார்த்திக் (29) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சரவணன்-சுதா சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சுதா மற்றும் நாதஸ்வர கலைஞர் கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து சுதா முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கார்த்திக் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்