< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவுதேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவுதேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்

தினத்தந்தி
|
10 April 2023 6:36 PM GMT

நாமக்கல்லில் தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்தார்.

10-ம் வகுப்பு மாணவர்

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் இளங்கோ (வயது 15). இவர் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற இளங்கோ, பள்ளிக்கூடத்தில் ஆங்கில தேர்வை எழுதிவிட்டு நண்பர்கள் சிலருடன் நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கி சாவு

நீச்சல் தெரியாத இளங்கோ திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த இளங்கோவின் உடலை மீட்டனர். பின்னர் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்