< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  304 மனுக்கள் பெறப்பட்டன
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 304 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
14 Nov 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 304 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 304 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தேவிகா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்