< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு  சேலம் உள்பட 5 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு சேலம் உள்பட 5 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
25 Aug 2022 5:33 PM GMT

நாமக்கல்லில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு சேலம் உள்பட 5 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

சேலம் மண்டல நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் மண்டலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை சேலம் மண்டல நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பரப்புரையாளர்கள் நாள்தோறும், 30 வீட்டு உரிமையாளர்களை சந்தித்து குப்பைகளை பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்து விளக்க வேண்டும். நீர்நிலைகளின் அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை எடுத்து கூற வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக அனைவரும் நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன் என தூய்மை உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

மேலும் செய்திகள்