< Back
மாநில செய்திகள்
போலீஸ் ஏட்டு மர்ம சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

போலீஸ் ஏட்டு மர்ம சாவு

தினத்தந்தி
|
19 Sep 2023 6:55 PM GMT

போலீஸ் ஏட்டு மர்மமான முறையில் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 45). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு காசநோய் உள்ளதால் மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆலங்குடிக்கு வந்த வைத்தீஸ்வரன் ஆம்பு ஆறு பாலம் அருகே கீழே விழுந்து கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து வைத்தீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து வைத்தீஸ்வரன் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்