< Back
மாநில செய்திகள்
அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜுக்கு முத்தரசன் வாழ்த்து
மாநில செய்திகள்

அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜுக்கு முத்தரசன் வாழ்த்து

தினத்தந்தி
|
9 March 2024 5:17 PM GMT

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜ் அவ்வையார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

அவ்வையார் விருது பெற்ற எழுத்தாளர் பாமா என்கிற பாஸ்டினா சூசைராஜுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

அவ்வையார் விருது பெற்ற படைப்பாளர் பாமாவுக்கு வாழ்த்துகள். சமூக சீர்திருத்தம் மற்றும் பாலின சமத்துவம் சார்ந்து செயல்பட்டு வரும் சமூக செயல்பாட்டாளார்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வையார் விருது கொடுத்து பாராட்டி, ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு (2024) பெண்ணிய பிரச்சினைகளை முன் வைத்தும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் இலக்கியம் வழியாக பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா என்கிற பாஸ்டினா சூசைராஜ் அவ்வையார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்ற எழுத்தாளர் பாமா அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்