< Back
மாநில செய்திகள்
கிருத்திகையையொட்டி  முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
29 May 2022 3:36 PM GMT

கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

மேலும் செய்திகள்