< Back
மாநில செய்திகள்
பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக தொடர்ந்த வழக்கில் இருந்து முருகன் விடுதலை.!
மாநில செய்திகள்

பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக தொடர்ந்த வழக்கில் இருந்து முருகன் விடுதலை.!

தினத்தந்தி
|
19 May 2023 11:28 AM GMT

வேலூர் சிறையில் பெண் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கில் இருந்து முருகனை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வேலூர்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்