< Back
மாநில செய்திகள்
முனிமுக்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

முனிமுக்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
7 March 2023 6:24 PM GMT

முனிமுக்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி விநாயகர் வழிபாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்லக்கு மற்றும் சிம்மவாகனம், காமதேனு வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் சாமி திருவீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி உடனமர் முனிமுக்தீஸ்வரர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் கடைவீதியில் உள்ள தேர் நிலையிலிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு மாரியம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு முழுவதும் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட தேரோட்டம் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு அதன் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை முனிமுக்தீஸ்வரர் திருப்பணி குழு மன்றம் மற்றும் கட்டளைதாரர்கள், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னதாராபுரம் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்