< Back
மாநில செய்திகள்
பனைமரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
கடலூர்
மாநில செய்திகள்

பனைமரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

தினத்தந்தி
|
24 July 2023 6:45 PM GMT

பனைமரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநத்தம்

குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள எல்லப்பன் பேட்டையை சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன் (வயது 23). இதேபோல், நெய்வேலி 30-வது வட்டம் மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் சங்கர் (27), இருசப்பன் மகன் ஸ்ரீநாத் (18) இவர்கள் 3 பேரும் தலைவாசல் அருகே நேற்று முன்தினம் நடந்த கலை நிகழ்ச்சிக்கு நடனமாட சென்றனர். பின்னர், அங்கிருந்து சொந்த ஊருக்கு நேற்று அதிகாலை தங்களது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, பெரிய நெசலூர் கைகாட்டி அருகே வந்த போது, சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

படுகாயமடைந்த சங்கர், ஸ்ரீநாத் ஆகியோரை வேப்பூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூாி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்