< Back
மாநில செய்திகள்
நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி
அரியலூர்
மாநில செய்திகள்

நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி

தினத்தந்தி
|
6 Jun 2022 8:22 PM GMT

நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


அரியலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து கோவிந்தபுரம் நோக்கி நடந்து சென்றுள்ளார்.

அப்போது மகாலிங்கபுரம் ரயில்வே கேட் அருகே சென்ற போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார்.அப்போது அந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் உடலை பிரேத பரிசோதனைக்ககாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தம்னர்.மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்